மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள திரு முல்லைவாசலில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை யை மூடக் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் எந்தவித நட வடிக்கையும் எடுக்காததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடை யை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. திருமுல்லைவாசல் தாழந் தொண்டி என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்த மதுபானக் கடையிலிருந்து மதுவை வாங்கி வரு பவர்கள், சீர்காழி - திருமுல்லைவாசல் பிரதான சாலையில் குழுக்களாக அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மேலும், அவ்வழியே கடந்து செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகளை துரத்துவது, அவர்களி டம் அத்துமீறி நடந்து கொள்வதுமாக உள்ளனர். குடிகாரர்களால் அப்பகுதி யில் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
காவல்துறை தாக்குதல்- காயம்
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை யை மூடக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பாரதிராஜா தலைமையில் வெள்ளியன்று முற்று கையிடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், சி.விஜய காந்த், ஒன்றியச் செயலாளர் கே.கேச வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரலிங்கம், ரெ.ரவீந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் மற்றும் திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, கே.பி.எஸ்.நகர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழக்கங்களுடன், டாஸ்மாக் கடையை நோக்கி வந்தனர். இதைப் பார்த்த காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை அமைத்து, அவர்களை தடுத்து பெண்களையும், போராட்டக்காரர்களையும் தாக்கினர். இதனால் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
சாலை மறியல்
காவல்துறையின் அடக்குமுறை யையும் மீறி, மதுபான கடை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் திருமுல்லைவாசல்-சீர்காழி பிரதான சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடையை மூடக் கோரியும், போராட்டத்தை அராஜகமான முறை யில் ஒடுக்க முயன்ற காவல்துறையை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.